உலகம்

தென் கொரியா; தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எழுவர் பலி

23/08/2024 06:32 PM

புச்சியோன், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தென் கொரியாவின் புச்சியோன் எனும் நகரில் உள்ள தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எழுவர் உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

கட்டிடத்தில் எட்டாவது மாடியில் தீ தொடங்கியதாக நம்பப்படுகிறது. 

சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

46 தீயணைப்பு இயந்திரங்களுடன், சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது அந்த தங்கும் விடுதியில் சுமார் 23 பேர் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)