உலகம்

ஜார்ஜியாவில் 14 வயது சிறுமி நடத்திய தாக்குதலில் நால்வர் பலி

05/09/2024 06:07 PM

விண்டர், 05 செப்டம்பர் (பெர்னாமா) --  ஜோர்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றி 14 வயதுடைய சிறுமி நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

மேலும், ஒன்பது பேர் காயத்திற்கு ஆளாகினர்.

விண்டரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் புதிய பள்ளித் தவணை தொடங்கிய பிறகு நடத்தப்படும் முதலாவது தாக்குதல் இதுவாகும்.

இந்தத் தாக்குதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆயுதமேந்திய பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்துத் தெளிவான நினைவுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர் கோல்ட் கிரே (Colt Gray) என்ற சிறுமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட அப்பள்ளியின் மாணவியுமான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)