பாலி இந்தோனேசியா, 06 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024 ஆம் ஆண்டுக்கான இந்தோனேசியா அறிவியல் புத்தாக்க விழாவில் செமினி தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் 2 தங்கம் 2 வெள்ளி சிறந்த படைப்புக்கான விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் கு.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் போட்டியில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி அனைத்து உலக ரீதியில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
அனைத்துலக ரீதியிலான போட்டியில் மாணவர்கள் சிறப்பான முறையில் வெற்றிபெற ஷாமினி, உமாதேவி, தமிழரசி, வினோதினி, விஜயன் ஆகிய ஆசிரியர்கள் முனைப்போடு பயிற்றுவித்தனர்.
மேலும், மாணவர்களான ஜெகன் ரூபன், கார்த்திகேயன், தர்ஷிகா, சித்தேஷ், கிஷோர், முகேஷ், சன்மித்தா, வேதா ஸ்ரீ, தாமிரா, லக்ஷன், ஈஸ்வரன், லோகேன் ராஜ் ஆகியோர் செமினி தமிழ்ப்பள்ளியின் சார்பில் பங்கேற்று உலகளவில் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)