பொது

ஹலால் சான்றிதழ் விவகாரம்; திரேசா கோக்கின் வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்தது

10/09/2024 06:03 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- ஹலால் சான்றிதழ் தொடர்பாக கருத்து வெளியிட்ட செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் வாக்குமூலத்தை போலீஸ் இன்று பதிவு செய்தது.

இன்று காலை மணி 10-க்கு புக்கிட் அமான் வந்தடைந்த திரேசாவுடன் அவரின் வழக்கறிஞரும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினருமான ஷரெட்சான் ஜிஹான் உடன் வந்திருந்தார்.

திரேசா கோக்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் உறுதிபடுத்தினார்.

ஹலால் சான்றிதழ் தொடர்பாக சர்ச்சை கருத்து வெளியிட்டதாக திரேசா கோக் மீது, இன்று பிற்பகல் 12 மணி வரை 50 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக ரசாருடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)