பொது

GISBH: இருவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது

29/09/2024 06:02 PM

ஷா ஆலம் , 29 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று நிறைவடைந்த GISB HOLDINGS நிறுவனத்திற்கான நிதி நிர்வகிப்பாளர் என்று நம்பப்படும் நபர் உட்பட இருவருக்கான தடுப்புக் காவலை, ஷா ஆலம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

50 வயதிற்குட்பட்ட அவ்விருவருக்கும் இன்று தொடங்கி ஐந்து நாள்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை துணைப் பதிவாளர் நோர் ஷாஹிரா அப்துல் சலிம் வெளியிட்டார்.

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்ஷன் 31(a) உட்பட 2022-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் இருவரின் மீதான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர்களின் வழக்கறிஞர் ரொஸ்லி கமாருடின் தெரிவித்தார்.

GISB Holdings நிறுவனம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி ஏழு நாள்களுக்கு அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

GISBH நிறுவனத்தின் நிதி நிர்வகிப்பாளர் என்று நம்பப்படும் நபர் ஒருவர், செப்டம்பர் 23-ஆம் தேதி, பினாங்கு, பட்டர்வெர்த்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட Op Global சோதனை நடவடிக்கையின் வழி கைது செய்யப்பட்டதை, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாரூடின் ஹுசேன் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)