Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இரு அமைச்சர்களின் பதவி விலகல்; கொள்கை ரீதியான நடவடிக்கை

29/05/2025 12:38 PM

கோலாலம்பூர், 29 மே (பெர்னாமா) - அமைச்சரவையிலிருந்து விலகுவதாக பொருளாதார அமைச்சர்  டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லியும், இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சரான நிக் நஸ்மி நிக் அஹ்மட்டும் நேற்று எடுத்த முடிவு கொள்கை ரீதியான நடவடிக்கை என்பதால் அதை மதிக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட அவ்விருவரும் இதுவரையில் பயனுள்ள பங்களிப்புகளை ஆற்றியுள்ளதுடன் அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் ஆதரித்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

"அவர்கள் கொள்கை ரீதியானவர்கள். கெஅடிலான் தேர்தலில் தோல்வியுற்றால் பதவி விலகுவதாக அவர்கள் அளித்திருந்த வாக்குறுதி மற்றும் அந்த நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். கட்சியின் உள் விவகாரங்களில் நாங்கள் தலையிடவில்லை என்றாலும், அமைச்சரவையில் உள்ள மற்றவர்களின் சார்பில் அவர்கள் மிகவும் திறம்பட பங்களித்துள்ளனர் என்றும் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் அவர்கள் கூட்டாக ஆதரிக்கிறார்கள் என்றும் நான் நம்புகிறேன்," என்றார் அவர்.

புதன்கிழமை இரவு அங்கசாபூரியில் நடைபெற்ற Desaku Mendunia இசை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவ்வாறு கூறினார்.

இரு அமைச்சர்களுக்கான காலியிடத்தை நிரப்புவதற்கு கெஅடிலான் கட்சியிலிருந்து பிரதிநிதியை நியமிக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு முழு அதிகாரம் இருப்பதையும் சாஹிட் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)