சிரம்பான், 31 மே (பெர்னாமா) -- வியாழக்கிழமை இரவு செராஸ், கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற அனைத்துலக நட்பு முறை ஆட்டத்தில், உலகின் 72-வது தரவரிசையில் உள்ள கேப் வெர்டே உடன் ஹரிமாவ் மலாயா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டிருந்தது, தேசிய அணிக்கான ஒரு மேம்பாடாகப் பார்க்கப்படுகிறது.
2027 ஆசியக் கிண்ணத்திற்கான, ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தகுதி சுற்றில் வியாட்நாமிற்கு எதிராக களம் காணவிருக்கும் ஹரிமாவ் மலாயாவிற்கு இது ஓர் உந்துதலாக அமையும் என்று, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
இன்று, சிரம்பான், நெகிரி செம்பிலானில் நடைபெற்ற தேசிய இளைஞர் வுஷு போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டப் பின்னர் ஹன்னா யோ செய்தியாளர்களிடம் பேசினார்.
வரும் செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் மற்றொரு நட்பு முறை ஆட்டத்தில், மலேசியா மீண்டும் கேப் வெர்டேவுடன் விளையாடவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502