செராஸ், 30 மே (பெர்னாமா) -- நேற்றிரவு கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற அனைத்துலக நட்பு முறை ஆட்டத்தில் உலகின் 72-வது தரவரிசையில் உள்ள கேப் வெர்ஃடேவுடன் ஹாரிமாவ் மலாயா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
2027-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் வியட்நாமுக்கு எதிராக மோதவுள்ள நிலையில் நேற்றய வெற்றி நாட்டின் காற்பந்து அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், உள்நாட்டைச் சேர்ந்த எழுவருடன் புதிய இறக்குமதி ஆட்டக்காரர் கெப்ரியல் பல்மெரோவும் களமிறக்கப்பட்டார்.
ஆட்டம் தொடங்கியது முதலே, தாக்குதல்களை தொடுத்து வந்த கேப் வெர்ஃடே தனது முதல் கோலை அடித்து முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தது.
ஆட்டத்தை சமப்படுத்த தேசிய காற்பந்து அணியின் தலைமை பயிற்றுநர் பீட்டர் கிலமொவ்ஸ்க்கியின் விளையாட்டாளர்கள் முயன்ற வேளையில், அது 79-வது நிமிடத்தில் நிறைவேறியது.
ஜூன் 3-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் மற்றொரு நட்பு முறை ஆட்டத்தில், மலேசியா மீண்டும் கேப் வெர்ஃடேவுடன் விளையாடவுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]