நைஜர், 01 ஜூன் (பெர்னாமா) - இந்த வாரம் நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 151 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நைஜர் மாநில அவசரகால நிர்வகிப்பு நிறுவன, தகவல் பிரிவு இயக்குநர் இப்ராஹிம் ஹுடு ஹுசைனி, புதிய இறப்பு எண்ணிக்கையை வழங்கினார்.
இந்த வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117ஆக முன்னதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.
மேலும், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நைஜர் மாநிலத்தின் மத்திய நகரமான Mokwa -வில் வெள்ளப்பெருக்கு சம்பவம் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நீடித்தது.
இந்நிலையில், சில நாட்கள் கடந்தப் பின்னரும், மீட்புப் பணியாளர்கள் சேறு மற்றும் குப்பைகளுக்கு மத்தியில் காணமல் போனவர்களின் உடல்களைத் தேடி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)