Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ரஷ்ய வட்டாரங்களில் இரு பாலங்கள் வெடித்துச் சிதறின

01/06/2025 05:30 PM

மாஸ்கோ, 01 ஜூன் (பெர்னாமா) -- உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் திட்டமிடப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, அதன் எல்லைக்கு அருகில் உள்ள தனித்தனி ரஷ்ய வட்டாரங்களில் இரண்டு பாலங்கள் வெடித்துச் சிதறின.

இச்சம்பவத்தில், குறைந்தது எழுவர் உயிரிழந்ததோடு 69 பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரையன்ஸ்க் பகுதியில், ரயில் பாதையின் மீது இருந்த ஒரு நெடுஞ்சாலை பாலம் வெடித்துச் சிதறியது.

சம்பவத்தின்போது, மாஸ்கோவிற்கு 388 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று அப்பாலத்திற்கு அடியில் பயணித்ததாக ரஷ்ய விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, குர்ஸ்க் வட்டாரத்தில், நெடுஞ்சாலைக்கு மேல் இருந்த ஒரு ரயில் பாலம் வெடித்துச் சிதறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502