டாக்கா, 05 ஜூன் (பெர்னாமா) -- ஈகைத் திருநாளை முன்னிட்டு, நாட்டில் அதிகரிக்கும் இறைச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வங்காளதேச கால்நடை வளர்ப்பாளர்களும் உரிமையாளர்களும் முன் வந்துள்ளனர்.
கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய கால்நடை இறக்குமதியில் ஏற்பட்ட சரிவினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஈகைத் திருநாளுக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதற்கு ஒரு கோடிக்கும் அதிகமான கால்நடைகள் தேவைப்படும்.
வங்காளதேசத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 76 லட்சம் டன் இறைச்சிகள் தேவைப்படுவதாக அந்நாட்டின் கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.
ஒரு காலக்கட்டத்தின்போது, இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில், இந்திய கால்நடைகள் முக்கிய பங்கு வகித்தன.
வர்த்தக கட்டுப்பாடுகளினால், வெளிநாட்டு கால்நடைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)