கார்கிவ், 08 ஜூன் (பெர்னாமா) -- கிழக்கு உக்ரேன் நகரமான கார்கிவ் மீது, நேற்று மாலையிலும் இரவிலும் ரஷ்யா ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதில் குறைந்தது நால்வர் பலியான வேளையில், ஒரு குழந்தை உட்பட 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உக்ரேனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ், ரஷ்ய எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது,
மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இந்த போரில் தொடர்ந்து ரஷ்யாவில் பாதிக்கப்படும் நகரமாகவும் அது உள்ளது.
ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் வழி ரஷ்ய துருப்புக்கள் வான் தாக்குதல்களை மேற்கொண்டது.
கார்கிவின் நான்கு தொழில்துறை பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில், தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில், கட்டிட இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கிக்கொண்டு இருக்கலாம் என்றும் நம்ப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)