கீவ், 10 ஜூன் (பெர்னாமா) -- உக்ரேன் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவிலான மேலும் ஓர் ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இம்முறை கீவ்வை குறிவைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில் ஒடெசா தென் துறைமுகத்தில் உள்ள மகப்பேறு சிகிச்சை அறையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ரஷ்யா மீது கீவ் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக மாஸ்கோ குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சில மணிநேரங்களில் வரலாற்று சிறப்புமிக்க பொடில் பகுதி உட்பட கீவ்வின் நான்கு மாவட்டங்களுக்கு மருத்துவர்கள் அனுப்பப்பட்டனர்.
தாக்குதல்கள் இன்னும் தொடர்வதாகவும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு மக்களை வலியுறுத்துவதாகவும் உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]