சவூதி அரேபியா, 10 ஜூன் (பெர்னாமா) -- சவூதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பில் கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து விளையாடப் போவதாக உறுதி செய்துள்ளார்.
அக்கிளப்பில் இருந்து வெளியேறி அவர் வேறொரு கிளப்பில் இணையப் போவதாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஆருடங்களுக்கு ரொனால்டோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சில ஆண்டுகளுக்கு முன்னர் மென்செஸ்டர் யுனைடெட் பயிற்றுநஎ எரிக் டென் ஹெக் உடனான கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு 2023-இல் அல்-நாசர் கிளப்பில் சேர்ந்தார்.
அந்த கிளப்புடனான அவரது தற்போதைய ஒப்பந்தம் ஜூன் 30 வரை நீடிக்கும் வேளையில் அவர் அங்கேயே தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
UEFA நாடுகளுக்கு இடையிலான லீக் கிண்ணத்தை நேற்று போர்த்துகல் இரண்டாம் முறையாக கைப்பற்றுவதற்கு ரொனால்டோவும் கோல் அடித்து உதவினார்.
அந்த ஆட்டத்தில், அவர் அனைத்துலக அரங்கில் தமது 138-வது கோலை அடித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]