கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) - பதின்ம வயது மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில்,உறுதிபடுத்தபடாத தகவல்களை பதிவேற்றம் செய்வது அல்லது பகிர்வதை நிறுத்துமாறு அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியது.
சாரா கைரினாவின் வழக்கு தொடர்பான தகவல்களையும் படங்களையும் சில பொறுப்பற்ற தரப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்வதை தமது தரப்பு கண்டறிந்துள்ளதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
சமூக ஊடக தளத்தில் பகிரப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருக்கும் பட்சத்தில் அது விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
பிரேத பரிசோதனை உட்பட வழக்கு தொடர்பான அனைத்து விசாரணை செயல்முறைகளும் நடைமுறையில் உள்ள சட்டத்தைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, உறுதியற்ற தகவல்களைப் பதிவேற்றம் செய்வது, பகிர்வது அல்லது விசாரணை தொடர்பான செய்திகளை வெளியிடுவது போன்ற எந்தவொரு செயல்களையும் நிறுத்துமாறு டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)