Ad Banner
 பொது

SILDENAFIL ரக மருந்தை வைந்திருந்த குற்றச்சாட்டை நேம்வி மறுப்பு

19/01/2026 05:04 PM

கோலாலம்பூர், ஜனவரி 19 (பெர்னாமா) -- கடந்த ஆண்டு தங்கும்விடுதி ஒன்றில் சில்டெனாபில் ரக மருந்தை வைந்திருந்த கூடுதல் குற்றச்சாட்டை பிரபல பாடகர் நேம்வீ என்று அறியப்படும் வீ மெங் சீ இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

அக்டோபர் 22-ஆம் தேதி மாலை மணி 4.30 அளவில் கோலாலம்பூர் ஜாலான் கான்லே-வில் உள்ள தங்கும்விடுதி அறையில் 0.78 கிராம் எடையிலான சில்டெனாபில் ரக மருந்தை வைந்திருந்ததாக 43 வயதான நேம்வீ  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1952-ஆம் ஆண்டு நச்சு சட்டம் செக்‌ஷன் 9 உட்பிரிவு ஒன்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதே சட்டம் செக்‌ஷன் 32 உட்பிரிவு இரண்டின் கீழ் அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான் சிறைத் தண்டனை அல்லது அவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

இதனிடையே, அதே இடம் தேதி மற்றும் நேரத்தில் 1.57 கிராம் எடையிலான மெத்தாம்பேட்டமைன் வகை போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டை அந்த ஆடவர் மறுத்துள்ளார்.

1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 12 உட்பிரிவு 3-டின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

முன்னதாக நீதிமன்றம் விதித்திருந்த ஜாமின் தொகை 2,000 ரிங்கிட்டை நிலைநிறுத்திய மாஜிஸ்திரேட் அதிகா முகமது சைம் இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பை மார்ச் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)