Ad Banner
 உலகம்

‘இந்தியாவின் மீசை மன்னர்’ என்று அழைக்கப்படும் கிரிதர் வியாஸ்

02/02/2026 06:27 PM

ராஜஸ்தான், பிப்ரவரி 2 (பெர்னாமா) -- இந்தியா ராஜஸ்தானைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சுமார் 40 அடி நீளத்திற்கு மீசையை வளர்த்து, உலகின் மீக நீளமான மீசை கொண்ட நபர் என்று தமக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

66 வயதுடைய கிரிதர் வியாஸ் எனும் அந்நபர், ராஜஸ்தான் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் தனிப்பட்ட ஆர்வமாகவும் கருதி 1985ஆம் ஆண்டு தொடங்கி தமது மீசையை வளர்த்து வருகிறார்.

ஒருபோதும் சோப்பு அல்லது ஷாம்பூவைப் பயன்படுத்தியதில்லை என்றும் ஆண்டிற்கு ஒரு முறை ஈரமான துணி மற்றும் கைக்குட்டையால் தமது மீசையை சுத்தம் செய்வதாகவும் கிரிதர் வியாஸ் விளக்கினார்.

‘இந்தியாவின் மீசை மன்னர்’ என்று அழைக்கப்படும் வியாஸ், அனைத்துலக ஒட்டக விழா போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரின் மீசை சுற்றுப்பயணிகளை வெகுவாக கவர்வதோடு, அவர்கள் தம்முடம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கின்னஸ் உலக சாதனையாளர் கர்னா பீலினால் ஈர்க்கப்பட்டு இந்த நீண்ட மீசையை வளர்க்கும் அவர், அதன் நீளத்தையும் பளபளப்பையும் பராமரிக்க கருப்பு மிளகு, தயிர் மற்றும் செம்மறி பால் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளை பயன்படுத்துகிறார்.

''இது என்னுடைய பொழுதுபோக்கு. உலகின் முதல் ஆணாக வேண்டும் என்பது என் ஆசை. மீசை மன்னன் யார் என்று யாராவது கேட்டால் ராஜஸ்தான், பிகானரில் உள்ள கிரிதர் வியாசை அனைவருக்கும் தெரியும். இதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை,'' என கிரிதர் வியாஸ் கூறினார்.

இந்திய வனத்துரையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிதர் தமது மீசையைப் பராமரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்.

உலகின் மிக நீளமான மீசைக்கான தற்போதைய பட்டத்தை ராம் சிங் சௌஹான் கொண்டிருக்கிறார்.

அவரின் மீசையின் நீளம் 2010ஆம் ஆண்டில் 4.29 மீட்டர் ஆகும்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)