Ad Banner
 உலகம்

ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு; 30-க்கும் மேற்பட்டோர் பலி

04/02/2026 04:15 PM

அமோரி, பிப்ரவரி 4 (பெர்னாமா) -- கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பானில் ஏற்பட்ட வரலாறு காணாத பனிப்பொழிவினால் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு போதிய உதவிகளை வழங்க அரசாங்க நிறுவனங்களுக்கு பிரதமர் சானே தகாய்ச்சி உத்தரவிட்டுள்ளார்.

பனிப்பொழிவு நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி வட ஜப்பானில் உள்ள அமோரி நகரில் மட்டும் 175 சென்டிமீட்டர் அளவிலான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

இது பனி காலத்தில் பதிவும் செய்யப்படும் அளவை விட இரண்டு மடங்கு அதிகம்.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை, கடும் பனிப்பொழிவினால் 30 பேர் உயிரிழந்த நிலையில், 290 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பனிப்பொழிவினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க, இயன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, நேற்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் Sanae Takaichi உத்தரவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)