குவாசெத்தா, 07 பிப்ரவரி (பெர்னாமா) -- கொலம்பியா, Guacheta- வில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் அறுவர் அகப்பட்டுக் கொண்ட நிலையில், அவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீதமுள்ளவர்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீத்தேன் வாயு குவிந்ததே இந்த வெடிப்புக்குக் காரணம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
கொலம்பியாவில், அனுமதி பெறாத சிறிய அளவிலான சுரங்கங்கள் செயல்படுவதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)