Ad Banner
Ad Banner
 பொது

ஈரான் & காசா நெருக்கடியில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் - அன்வார்

ஜோகூர் பாரு, 05 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் மீதான போர் மற்றும் காசாவில் மோதல் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தூதரக உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.

மாறாக, சில தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு, நாட்டின் தூதரக உறவுகளை வலுப்படுத்த உதவியதால், மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முடிந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

[ read more ]
10h ago
 MORE NEWS
 பரிந்துரை