பொது

இராணுவச் சடங்கின் உடையைப் போன்று அணிந்த எழுவர் மீது கூடிய விரைவில் வழக்கு

ஷா ஆலம், 31 ஜனவரி (பெர்னாமா) -- இம்மாத தொடக்கத்தில், இராணுவ சடங்குகளுக்கான உடையைப் போன்று அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காணொளி பரவலாகியது தொடர்பில், அதில் சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பின், தலைவர் உட்பட எழுவர் மீது கூடிய விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றவியல் சட்டம், செக்ஷன் 140, 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டம், செக்‌ஷன் 50(3), தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233-ரின் கீழ், அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

[ read more ]
19h ago
 MORE NEWS
 பரிந்துரை