கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) -- மாட்சிமை தங்கிய மாமன்னர், சரவாக் மாநிலத்திற்கு அறிவித்திருக்கும் அவசரகால நிலை அமலாக்க காலக்கட்டம் முழுவதும் மாநில தேர்தல் நடத்தப்படாது என்றும் அந்த அறிவிப்பு முன்னதாகவே மீட்டுக் கொள்ளப்பட்டால் மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக, பிரதமர் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.
ஆகஸ்ட் முதலாம் தேதி நிறைவடையவிருக்கும் அவசரகால நிலையைத் தொடர்ந்து சரவா மாநிலத்தில் அந்த பிரகடனத்தை தொடர்ந்து அமல்படுத்துவது தொடர்பில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா-விற்கு ஆலோசனை கூறுவதற்கு ஜூலை 21-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாமன்னர் சரவா மாநில அரசாங்கத்துடன் கலந்து ஆலோசித்து, ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி வரையில் அவசரகால நிலை அமல்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை