பொது

ரோசாய்ட்டின் மறைவு குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்த உணர்வைத் தருகிறது - பிரதமர்

19/08/2024 04:51 PM

சுபாங் ஜெயா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பிரதமர் அலுவலகத்தின் ஊடக, வியூகத் தொடர்பு இயக்குனர், ரோசாய்ட் அப்துல் ரஹ்மானின் மறைவு தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்த உணர்வைத் தருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஊடகத் துறையில் பணியாற்றிய காலம் முதலே தமக்கு நன்கு அறிமுகமான ரோசாய்ட், ஊடகவியலாளர்களுடன் நல்லுறவைப் பேணுவதில் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அரனாக செயல்பட்டதாகவும் புகழாரம் சூட்டினார்.

இன்று, சுபாங் ஜெயா, புத்ரா ஹய்ட்ஸ் பள்ளிவாசலில் ரோசாய்ட் நல்லுடக்கு, பிரதமரும் அவரது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் இறுதி மரியாதை செலுத்தினர்.

காலை மணி 10.50 அளவில் அவரின் நல்லுடல், பிரசின்ட் 20 இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

'Sinar Harian' குழுமத்தின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியரான ரோசாய்ட், ஞாயிற்றுக்கிழமை மாலை இருதயக் கோளாறினால் உயிரிழந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)