விளையாட்டு

ஜப்பான் பொது பூப்பந்து போட்டி; மலேசிய இரட்டையர் அடுத்த சுற்றுக்குத் தேர்வு

21/08/2024 06:44 PM

யோகோஹாமா, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் அடுத்த ஆட்டத்திற்கு ஜப்பானின் ஆடவர் இரட்டையர் ஜோடி தேர்வாகியது.

புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று, உலக வெற்றியாளர்களான தென் கொரியாவின் காங் மின் யக்- சியோ சியுங் ஜே (Kang Min-hyuk - Seo Seung-jae) ஜோடி அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறினர்.

தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோ - கிட்டிநுபோங் கெட்ரேன் (Supak Jomkoh - Kittinupong Kedren) ஜோடியுடன் களம் கண்ட தென் கொரியா, 21-13, 21-16 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆடவருக்கான இரட்டையர் ஆட்டத்தில், மலேசியாவின் ஓங் யீ சிங் - டியோ ஈ யி (Ong Yew Sin - Teo Ee Yi) ஜோடி, டென்மார்க் விளையாட்டாளர்களுடன் மோதினர்.

இந்த ஆட்டத்தில், மலேசியா 21-14, 21-13 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், தென் கொரியாவின் ஜியோங் நா யுன் - கிம் ஹி ஜியோங் (Jeong Na-eun- Kim Hye-jeong) ஜோடி, ஜப்பானின் மாயு மட்சுமோட்டோ -வக்கான நகாஹரா (Mayu Matsumoto -Wakana Nagahara) ஜோடியை 21-15, 16-21, 21-16 என்ற புள்ளிகளில் தோற்கடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)