கூச்சிங், 22 ஆகஸ்டு (பெர்னாமா) -- சுக்மா, நீச்சல் போட்டியில் நாட்டின் தேசிய வீரர் முஹமட் டூஹா சுல்பிக்ரி தேசிய சாதனைப் படைத்தார்.
இன்று பிற்பகலில் நடந்த ஆடவருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தோடு, அவர் தொடர்ந்து தனக்கென தனி வரலாற்றை உருவாக்கினார்.
இறுதிப் போட்டியில், எழுவரைத் தோற்கடித்து, டூஹா 3 நிமிடம் 55.59 வினாடிகளில் ஒரு புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார்.
அவர், 2012 -ஆம் ஆண்டில், சரவாக் வீரர் லீ ஜியோ ஜியின் செய்த 3 நிமிடம் 58.65 வினாடிகள் சாதனையை முறியடித்தார்.
இந்த சுக்மாவில், டூஹா தனது ஐந்தாவது தங்கத்தை வென்றார் என்பது குறிப்பிடதக்கது.
வெள்ளிப் பதக்கத்தை சிலாங்கூர் வீராங்கனை ஹென்றி கோ லி ஹென் வென்ற வேளையில், வெண்கலப் பதக்கத்தை பினாங்கு வீரர் சாமுவேல் சோங் வெங் வென்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)