பொது

பெற்றோரையும் உறவினர் மகளையும் கொலை செய்த ஆடவருக்கு 9 ஆண்டுகள் சிறை

12/09/2024 08:04 PM

மூவார் , 12 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றோரையும் உறவினர் பிள்ளையையும் கொலை செய்ததுடன், மூவாரில் உள்ள ஒரு வீட்டைக் கொளுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மூவார் செக்ஷன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 48 வயதுடைய அஸ்மான் முஹ்மட் நோர் எனும் அந்த ஆடவர் ஒப்புக் கொண்டத்தைத் தொடர்ந்து, நீதிபதி நரிமான் பஹாருடின் இத்தண்டனையுடன் ஐயாயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஐந்து மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நரிமான் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், மற்றோர் உறவினர் பிள்ளையையும் அடித்து காயம் ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பின்னிரவு ஒன்று முதல் மூன்று மணிக்குள், மூவார், ஜாலான்  Sekolah கம்போங் ராயா ரெடான் என்ற முகவரியில், 14 வயதுடைய தனது உறவினர் பிள்ளையை கட்டையைக் கொண்டு வேண்டுமென்றே தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 326-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)