அலோர் ஸ்டார், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கெடாவும் ஒன்றாகும்.
குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து உடைமைகளை இழந்து அங்கு பாதிக்கப்பட்டோர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்த வேளையில், இன்று மாலை நிலவரப்படி அது 207ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் பெண்டாங் மாவட்டத்திலுள்ள ஆறு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் கட்டம் கட்டமாக மூடப்பட்டன.
அதில் 49 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் தானா மேரா விளையாட்டு வளாகத்திலும் பெண்டாங் இடைநிலைப் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனதாக சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் அறிக்கை தகவல் வெளியிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)