காத்மாண்டு, 29 செப்டம்பர் (பெர்னாமா) -- நேபாளம் காத்மாண்டுவில் ஞாயிற்றுகிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 101 பேர் பலியாகினர்.
பருவநிலை மாற்றத்தினால் தொடர்ந்து அதிகம் மழை பெய்து வருவதால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி கிழக்கு மற்றும் மத்திய நேப்பாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பல ஆறுகளில் திடீர் வெள்ளமும் நாட்டின் நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய சேதமும் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை கடந்து விட்டதாகவும் 64 பேரைக் காணவில்லை என்றும் போலீஸ் பேச்சாளர் டான் பாடூர் கார்க்கி தெரிவித்தார்.
தேடல் மற்றும் மீட்பு பணிகள் தொடரப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)