கோலா நெருஸ், 05 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் திரெங்கானு எஃப்.சி 1-1 என்று பி.டி.ஆர்.எம் எஃப்.சி உடன் சமநிலை கண்டது.
சொந்த அரங்கில் வெற்றியை பதிவு செய்ய தவறிய திரெங்கானு எஃப்.சி 17 புள்ளிகளோடு பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள வேளையில் பி.டி.ஆர்.எம் எஃப்.சி 15 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தைக் கொண்டுள்ளது.
கோலா நெருஸ் சுல்தான் மிசான் சைனால் அபிடின் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திரெங்கானு கோல் அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் முயற்சிகளை பி.டி.ஆர்.எம் எஃப்.சி தொடர்ந்து தகர்த்து வந்த வேளையில் முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் திரெங்கானு அதன் முதல் கோலைப் போட்டது.
பின்னர், இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பி.டி.ஆர்.எம் எஃப்.சி 53-வது நிமிடத்தில் அதன் ஒரே கோலைப் போட்டு ஆட்டத்தை 1-1 என்ற நிலைக்கு கொண்டு வந்தது.
அதேநிலை இறுதிவரை நீடிக்க ஆட்டம் இரு தரப்புக்கும் சமநிலையில் முடிந்தது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]