ஷாங்காய், 06 அக்டோபர் (பெர்னாமா) -- ஷாங்காய் டென்னிஸ் போட்டி..
நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் அமெரிக்காவின் அலெக்ஸ் மிக்லெல்சனை நேரடி செட்களில் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் வழி, தமது ஐந்தாவது ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்லும் இலக்கில் ஜோகோவிச் முனைப்போடு தமது பயணத்தைத் தொடர்கின்றார்.
முதல் செட்டின் தொடக்கத்தில் 4-1 என்று பின் தங்கிய நிலையில் இருந்த அவர், கடும் போட்டிக்குப் பின்னர் 7-3 என்று அந்த செட்சை கைப்பற்றினார்.
அதேபோல, இரண்டாம் செட்டையும் போராடி அவர் 7-6 என்ற நிலையில் வென்றார்.
ஜோகோவிச், மூன்றாம் சுற்றில் இத்தாலியின் ஃபாலிவோ கொபோலி அல்லது சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா உடன் மோதவிருக்கின்றார்.
இதனிடையே, மற்றுமொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனியின் அலெக்சண்டர் ஸ்வேரேவ் 6-4, 6-2 எனும் நிலையில், இத்தாலியின் மட்டிய பெலுச்சியை வீழ்த்தினார்.
உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான ஸ்வேரேவ், 2019-ஆம் ஆண்டில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டிவரை முன்னேறியதால், இம்முறை அப்பட்டத்தை கைப்பற்றும் குறிக்கோளோடு களமிறங்கி உள்ளார்.
-- பெர்னாமா
நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)