கோலாலம்பூர், 09 அக்டோபர் (பெர்னாமா) -- மலாக்காவில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பாதிக்கப்பட்ட 22 பேர் தங்குவதற்கு செயல்பட்டு வந்த வெள்ள நிவாரண மையம் இன்று பிறபகலில் மூடப்பட்டது.
இதர மாநிலங்களிலும் மாலை வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது.
ஜோகூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264-ஆக குறைந்துள்ளது.
இதனிடையே, கெடாவில் 2,379-ஆகவும் பேராக்கில் 128-ஆகவும் குறைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)