உலகம்

டிக்டோக்கிற்கு எதிராக கொலம்பியா வழக்குப் பதிவு

09/10/2024 08:29 PM

அமெரிக்கா, 09 அக்டோபர் (பெர்னாமா) -- டிக்டோக்கிற்கு எதிராக கொலம்பியாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களும் மாவட்டமும் நேற்று வழக்குப் பதிவு செய்தன.

பிரபலமான குறுகிய காணொளிகளைக் கண்டு குழந்தைகள் அதற்கு அடிமையாவதோடு அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க், கலிபோர்னியா, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டத்துறை தலைவர்கள் கூட்டணியால் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட டிக்டோக் மீதான தேசிய விசாரணையின் பலனாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து புகார்களும் மாநில நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)