விளையாட்டு

பெர்னாமா ஊழியர்களின் உறவை வலுப்படுத்தும் பௌலிங் விளையாட்டுப் போட்டி

13/10/2024 05:47 PM

பெட்டாலிங் ஜெயா, 13 அக்டோபர் (பெர்னாமா) -- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா இன்று தனது ஊழியர்களுக்காக பௌலிங் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்தது.

பெர்னாமா பௌலிங் சங்கம் வழிநடத்திய இப்போட்டி, ஊழியர்கள் உடனான உறவை வலுப்படுத்த உதவும் என்று பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''பொழுதுபோக்குக்காக நாங்கள் நடத்தும் முதல் போட்டி இதுவாகும். சக ஊழியர்களுடன் நட்பை ஏற்படுத்த அல்லது பலப்படுத்த விரும்புகிறோம்,'' என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இப்போட்டியைத் தொடக்கி வைத்த பின்னர், நூருல் அஃபிடா அவ்வாறு கூறினார்.

சுகாதாரத்தை மேம்படுத்தும் கிளப்களை நிறுவ முன்வர வேண்டும் என்று அவர் பெர்னாமா ஊழியர்களை ஊக்குவித்தார்.

பெர்னாமாவின் 96 ஊழியர்கள் கலந்து கொண்ட இப்போட்டி ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜூவும் கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)