கோலாலம்பூர், 15 அக்டோபர் (பெர்னாமா) -- டென்மார்கின் சூப்பர் 750 தகுதி கொண்ட பொது பூப்பந்து போட்டியிலிருந்து நாட்டின் தேசிய ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர் லீ சி ஜியா விலகிக் கொண்டுள்ளார்.
ஜப்பானின் முன்னணி ஆட்டக்காரர் கெந்தா நிஷிமொதோவுடன், சி ஜியா முதல் சுற்றில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முறை அவர் விளையாட முடியாமல் போனது.
சி ஜியா-விற்கு பதிலாக இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா கிந்திங் அந்த ஆட்டத்தில் நிஷிமொதோவை சந்திக்கவுள்ளார்.
அர்திக் பொதுப் பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வதாநாபே மோதிய சி ஜியா, 66 நிமிடங்களில், 15-21, 21-13 மற்றும் 12-21 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தார்.
கடந்தாண்டு நடைபெற்ற சீனா மற்றும் சுவிட்சர்லாந்து பொதுப் பூப்பந்து போட்டிகளின் அரையிறுதி சுற்றுகளில், வதாநாபே-இடம் வீழ்ந்த சி ஜியாவிற்கு, இது அவருடன் மூன்றாவது தோல்வியாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)