விளையாட்டு

எம்பாப்பே சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு விவகாரத்தை போலீஸ் விசாரிக்கிறது

15/10/2024 06:47 PM

பிரஸ்சல்ஸ், 15 அக்டோபர் (பெர்னாமா) -- ரியல் மெட்ரிட்டின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வல்லுறவு விவகாரத்தை சுவீடன் போலீஸ் விசாரித்து வருகிறது

ஆயினும் தம் மீது சுமத்தப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டை எம்பாப்பே மறுத்திருக்கிறார்.

அந்த பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பில் போலீசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆப்டன்பிளேட் (Aftonblade) என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பது எம்பாப்பே என்று மற்றொரு நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் எம்பாபேவின் பிரதிநிதிகளிடம் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்திருக்கின்றனர். 

கடந்த வியாழக்கிழமை எம்பாபே, தமது நண்பர்களுடன் சுவீடனின் ஸ்டாக்ஹோம் உள்ள உணவு விடுதி ஒன்றுக்குச் சென்றிருக்கிறார்.

அதன் பின்னர் வெள்ளிக்கிழமை அவர் சுவீடனில் இருந்து புறப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)