பொது

GISBH-உடன் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஈடுபடுத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை

17/10/2024 04:32 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- இதுவரை தாங்கள் மேற்கொண்ட விசாரணையின்படி, GLOBAL IKHAWAN SERVICE AND BUSINESS குழும நிறுவனம், GISBH-உடன் இணைந்து அரசாங்க அதிகாரிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ செயல்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அரச மலேசிய போலீஸ் படை, PDRM பல்வேறு கோணங்களிலும் சட்ட அடிப்படையிலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், அதற்கான சாத்தியத்தை மறுக்கவில்லை என்று உள்துறை அமைச்சு நாடாளுமன்ற அகப்பக்கத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.

GISBH உடன் இணைந்து அரசாங்க அதிகாரிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ செயல்பட்டார்களா என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பான குற்றச்செயலுக்கு அரச விசாரணை ஆணையத்தின் தேவை குறித்தும் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக, தற்போது அரச விசாரணை ஆணையத்தை அமைக்க அமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சிய சம்பந்தப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், PDRM-க்கு வாய்ப்பு அளிப்பதோடு அதன் மீது அதிக நம்பிக்கை வைக்கப்பட்ட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)