கோத்தா பாரு , 27 செப்டம்பர் (பெர்னாமா) -- GISB HOLDINGS நிறுவனம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு முன்னதாக கைது செய்யப்பட்ட நால்வரின் தடுப்புக் காவல் நாளை தொடங்கி மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
15-இல் இருந்து 45 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவருக்குமான தடுப்புக் காவல் நீட்டிப்பு விண்ணப்பம் இன்று, கிளாந்தான் கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் ராய்ஸ் இம்ரான் ஹமிட் முன்னிலையில் செய்யப்பட்டது.
1984-ஆம் ஆண்டு அச்சிடும் இயந்திரம் மற்றும் வெளியிட்டு சட்டம் செக்ஷன் 8(2)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
விசாரணைக்கு உதவும் வகையில் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு அந்த நான்கு ஆடவர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த செய்தியை முன்னதாக ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் ஒன்று வழி நடத்திய 20 தொண்டு இல்லங்களில்...
செப்டம்பர் 11-ஆம் தேதி, போலீசார் மேற்கொண்ட Op Global அதிரடி சோதனையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 392 சிறுவர்களும் பதின்ம வயதினரும் காப்பாற்றப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)