பொது

தீபாவளியை முன்னிட்டு பொது சேவை துறை ஊழியர்களுக்கு பதிவு இல்லாத விடுப்பு

26/10/2024 06:24 PM

கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளியை முன்னிட்டு, பொது சேவை துறை, ஜேபிஏ ஊழியர்கள் இவ்வாண்டு தொடங்கி அப்பெருநாளுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவோ அல்லது இரண்டாம் நாளோ பதிவு இல்லாத விடுப்பு, சிடிஆர்-ஐ பயன்படுத்தலாம்.

சிடிஆர்-ஐ பயன்படுத்துவது, அவர்களின் அமலாக்கத் தரப்பு ஏற்றுக் கொள்வதை பொருத்தது என்று ஜேபிஏ குறிப்பிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பான சுற்றறிக்கை, அனைத்து மாநில பொது சேவை துறை, சட்டப்பூர்வத் தரப்பு மற்றும் ஊராட்சித் துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தீபாவளி, அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படுவதால், பொது சேவை துறை ஊழியர்கள் இந்த ஒரு நாள் சிடிஆர்-ஐ அக்டோபர் 30-ஆம் தேதியோ அல்லது நவம்பர் முதலாம் தேதியோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஜேபிஏ-இன் வழி அரசாங்கம் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, அப்பண்டிகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு இந்தக் கூடுதல் விடுமுறை ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)