சகாடெகாஸ், 27 அக்டோபர் (பெர்னாமா) -- சனிக்கிழமை, மத்திய மெக்சிகோவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
மேலும் அறுவர் காயமடைந்தனர்.
சகாடெகாஸ் எனும் மாநிலத்தில் இவ்விபத்து ஏற்பட்டது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கனரக லாரியுடன் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட அறிக்கையில் 24 பேரு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், முழுமையான விசாரணை மேற்கொண்ட பின்னரே, மாண்டவர்கள் துல்லியமான எண்ணிக்கை தெரிவிக்கப்படும் என்று மாநில ஆளுநர் டேவிட் மான்ரியல் தெரிவித்திருக்கிறார்.
கனரக லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளத்தில் விழுந்த சில உடல்களை மீட்கும் நடவடிக்கையை மீட்புப் படையினர் மேற்கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)