உலகம்

திராமி சூறாவளியால் பிலிப்பைன்சில் 120-க்கும் அதிகமானோர் பலி

27/10/2024 02:23 PM

பதங்காஸ், 27 அக்டோபர் (பெர்னாமா) -- பிலிப்பைன்சில் வீசிய TRAMI சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120-க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலச்சரிவுகளில் புதையுண்டவர்களை தேடி மீட்கும் பணிகள் தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, வடமேற்கு பிலிப்பைன்சில் வீசிய திராமி சூறாவளியால், கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் உதவியின்றி அவதியுற்று வருகின்றனர்.

அடுத்த வார தொடக்கத்தில் திராமி சூறாவளி மேற்கு பிலிப்பைன்சை மீண்டும் தாக்கக்கூடும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதனால், அந்நாட்டின் மேற்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் நேற்று பார்வையிட்டார்.

பிலிப்பைன்சில் சூறாவளியால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மார்கோஸ் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)