Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அந்நிய நாட்டவர்கள் விவகாரத்தில் அமெரிக்க வழிமுறைகளை உள்துறை அமைச்சு பின்பற்றாது 

12/03/2025 05:34 PM

கோலாலம்பூர், 12 மார்ச் (பெர்னாமா) - சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பும் அமெரிக்காவின் கொள்கையைப் பின்பற்ற உள்துறை அமைச்சு தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை.

நாட்டிற்குள் குவிந்து கிடக்கும் அந்நிய நாட்டினர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண கடுமையான அப்புதிய கொள்கையை அமைச்சு அமல்படுத்ததாது என்று துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

நாட்டில் சட்டவிரோதக் குடியேறிகளின் இருப்பைக் கட்டுப்படுத்த, உள்துறை அமைச்சு, கட்டுப்பாட்டு நடைமுறைகளை தொடர்ந்து மேம்படுத்துவதோடு குடிநுழைவு விதிமுறைகளையும் அமல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

"அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் செயல்படுத்தி வரும் முற்போக்கான முயற்சிகளில், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் கட்டுப்பாடு, பயணிகள் முன் பரிசோதனை முறையின் அறிமுகம் ஆகியவை இவ்வாண்டு. டிசம்பரில் முழுமையாக செயல்படுத்தப்படும்," என்றார் அவர்.

இதைத் தவிர்த்து,  நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் இருப்பைக் கட்டுப்படுத்துவதற்கு,அமலாக்க நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சு செயல்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் கொள்கையில் அமெரிக்காவின் வழிமுறைகளைப் பின்பற்ற அமைச்சு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து இன்று மேலவையில் செனட்டர் அஸஹார் ஹசான் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா அவ்வாறு பதிலளித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)