Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஆசியான் ALL-STARS நட்புமுறை ஆட்டம்

27/05/2025 06:54 PM

கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) --   ஆசியான் All-Stars நட்புமுறை காற்பந்தாட்டத்தில் பங்கேற்பதற்காக மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் விளையாட்டாளர்கள் நேற்று கோலாலம்பூர் வந்தடைந்தனர்.

நாளை புக்கிட் ஜாலில் காற்பந்து அரங்கில் நடைபெறவிருக்கும் நட்புமுறை ஆட்டத்தில் மலேசியா மென்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதவுள்ளது.

ரூபன் அமொரின் தலைமையிலான Red Devils அணியின் இடம்பெற்றுள்ள 32 ஆட்டக்காரர்களை உள்நாட்டு காற்பந்து ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

எண்ட்ரி ஒனானா, ஜோன்னி இவான்ஸ், ஹெரி மகுயிரி, லுக் ஷோ, கெஸ்மிரோ மற்றும் புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.

2009-ஆம் ஆண்டு புக்கிட் ஜாலில் காற்பந்து அரங்கில் நடைபெற்ற இரு நட்புமுறை ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட், மலேசியாவை 3-2 மற்றும் 2-0 என்ற கோல்களில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2024-ஆம் ஆண்டு பருவத்திற்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஆஸ்டன் வில்லாவை 2-0 என்ற கோல்களில் வீழ்த்திய மென் யு, நேற்று மாலை மணி 6.30-க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனிடையே, இன்றைய ஆசியான் உச்சநிலை மாநாட்டின் பரபரப்பான சூழலிலும், நட்பு முறை ஆட்டத்திற்காக மலேசியா வந்தடைந்திருக்கும்..

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் பிரபலங்கள் மற்றும் ஆசியான் All-Stars காற்பந்து குழுவினரைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உற்சாகத்துடன் வரவேற்று சிறிது நேரம் சந்திப்பு நடத்தினார்.

அந்த சந்திப்பில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ, ஆசியான் All-Stars காற்பந்து குழுவின் பயிற்றுநர் கிம் சங் சிக் என பலரும் கலந்து கொண்டனர்.

அந்த 20 நிமிட சந்திப்பில், Red Devils அணியின் பயணம் மற்றும் போட்டிக்கான தயாரிநிலைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)