பெட்டாலிங் ஜெயா, 29 மே (பெர்னாமா) - சிலாங்கூரில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.3 விழுக்காடு குறைந்துள்ளதாக அம்மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு தலைவர் ஜாமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
கடந்த மே 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிலாங்கூரில் 519 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரு மரணச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கு முந்தை வாரம் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 566 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.
பெட்டாலிங் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அங்கு மட்டும் 178 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் கிள்ளானில் 119 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் குறைந்தாலும் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு ஜமாலியா கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)