Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கிரிக் பேருந்து விபத்து: 15 பேர் பலி

09/06/2025 05:18 PM

கிரிக், 09 ஜூன் (பெர்னாமா) -- சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக (உப்சி) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் பலியாகினர்.

இன்று அதிகாலை பேராக் கிரிக் கிழக்கு-மேற்கு சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பாக, கிரிக் மருத்துவமனையில் இருந்து அதிகாலை மணி 1.10-க்கு அழைப்பு கிடைத்ததாக  பொது பாதுகாப்புப் படையின் மாவட்ட நடவடிக்கை மையம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இவ்விபத்தினால், சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சாலை விபத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலு பேராக் பொது பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

அதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மருத்துவமனையில் மாண்டனர்.

நால்வர் படுகாயம் அடைந்தனர். 

உப்சி மாணவர்களை ஏற்றிக் கொண்டு அந்த பேர்ந்து திரெங்கானு ஜெர்தெவில் இருந்து பேராக் தஞ்சோங் மாலிம் நோக்கிப் பயணித்ததாக நம்பப்படுகிறது.

விபத்தினால் பேருந்து கவிழ்ந்ததாகவும், கார் பள்ளத்தில் விழுந்ததாகவும் பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடோன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)