கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) -- இன்று அதிகாலை பேராக் கிரிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய உதவிகளை ஒருங்கிணைக்க உயர்கல்வி அமைச்சை அவர் பணித்துள்ளார்.
மரண விபத்துகளைத் தவிர்க்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும், இலக்கை நோக்கி விரைந்து செல்ல வேண்டாம் என்று அனைத்து ஓட்டுநர்களையும் அவர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)