ஈப்போ, 09 ஜூன் (பெர்னாமா) -- இன்று அதிகாலை பேராக், கிரிக் கிழக்கு-மேற்கு சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், உப்சி-யைச் சேர்ந்த 42 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியது.
முன்னதாக 44 மாணவர்கள் அப்பேருந்தில் செல்ல வேண்டியிருந்ததாக, பெர்னாமா தொடர்பு கொண்ட போது, சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் நிறுவாக தொடர்பு பிரிவு தெரிவித்தது.
செயல்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்து குறித்த தகவல் தெரிந்தவர்கள் 05- 450 7148 (அலுவலகம்) அல்லது 019-571 9977 எனும் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு, உப்சி-இன் நிறுவாக தொடர்பு பிரிவு கேட்டுக் கொண்டது.
இதனிடையே, விபத்தில் சிக்கிய 7 மாணவர்கள் சிவப்பு மண்டலத்திலும், 20 மாணவர்கள் மஞ்சள் மண்டலத்திலும், 6 மாணவர்கள் பச்சை மண்டலத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் பலியானதாக, முன்னதாக, ஹுலு பேராக் மாநில பொது தற்காப்புப் படை, ஏ.பி.எம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
விபத்து குறித்து அதிகாலை 1.10 மணிக்கு கெரிக் மருத்துவமனையிலிருந்து தங்கள் தரப்பிற்கு அழைப்பு கிடைத்ததாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)