கோலாலம்பூர், பிப்ரவரி 13 (பெர்னாமா) -- டான் ஶ்ரீ முகிடின் யாசின் பெர்சத்துவின் கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று அக்கட்சியின் மக்களவைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரோனல்ட் கியான்டி விடுத்த அழைப்புக்கு அதன் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முகிடினின் முந்தைய சேவை மற்றும் பங்களிப்புகளை மறுக்கவில்லை என்று அவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ள வேளையில், இனி அவர் கட்சியை ஒன்றிணைத்து வெற்றியை நோக்கி கொண்டுச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பெர்சத்துவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின், சிறந்த இடைக்காலத் தலைவராகலாம் என்று அந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
அந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு குறித்த அறிக்கையின் நம்பகத்தன்மையை பெர்னாமா தொடர்பு கொண்டபோது சைப்புடின் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, அந்த ஊடக அறிக்கையை அவர் இன்று தனது சமூக ஊடகத்திலும் பதிவேற்றினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)