தைவன், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- தைவானில் மீண்டும் நிலநடுக்கம்.
இன்று காலை 8.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவைக் கருவியில் 6.1-ஆக பதிவாகியது.
தைவான், தைச்சுங் நகரில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் பதிவாகியது.
இருப்பினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப் பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
இம்மாத தொடக்கத்தில் தைவானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு, 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1999-ஆம் ஆண்டு தைவானில் பதிவாக 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2400 பேர் மாண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)