உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழப்பு

22/06/2024 07:28 PM

அமெரிக்கா, 22 ஜூன் (பெர்னாமா) -- அர்கென்சாஸ் மாநிலத்தில், ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தினால் மூவர் கொல்லப்பட்டனர்.

மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

ஃபோர்டைஸ் எனும் நகரில் உள்ள அங்காடி கடையில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் கூறியது.

பதற்றம் அடைந்த பொதுமக்கள், பாதுகாப்பு கருதி கடையில் இருந்த அறைகளில் பதுங்கி கொண்டனர்.

தகவல் அறிந்தது சம்பவ இடத்தை சென்றடைந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது இருதரப்புக்கு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அந்நபர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் கூறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)