பொது

பல்வேறு சமூகப் பிரச்சனைகள் காரணமாக தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

09/07/2024 06:10 PM

கோலாலம்பூர், 9 ஜூலை (பெர்னாமா) -- 15555 என்ற மனநல உதவிக்கான சேவை எண் அல்லது 'TALIAN HEAL' 2022 முதல் இந்த ஆண்டு ஜூன் வரை தற்கொலை தொடர்பில் 48,000 க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டு பதிவான 981 தற்கொலை சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை அதிகரித்து ஆயிரத்து 87 ஆக பதிவாகியிருப்பதாக துணைப் பிரதமரும் தேசிய சமூக மன்றத்தின் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் தேசிய சமூக மன்றக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)